Wednesday, January 12, 2011

லொள்ளு... எலக்‌ஷன் தில்லுமுள்ளு! ! !

ஜோக்ஸ்...ஜோக்ஸ்...ஜோக்ஸ்...

1.’1 லட்சம் ஓட்டு வித்யாசத்துல ஜெயித்தது கின்னஸ் சாதனையா?’
    ’பின்னே மொத்த ஜனத்தொகையே 87,000 தானே?’
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmVJyDBcXHazZwQQ8LT34W6NPP-Rc5e5Zwnt-LtXQqUBz8f6pcfWZZ74anNqDvGbHmY2-gJuwf6nghO7SVIq1O4ZYt_UnO6Kv7jgRb0y6KL49ltqObd1ioJxfUZaVcDM2TV_p5EO_IMoVj/s200/ballot+box.jpg

2.”தலைவர் ஏன் கோபமா வேட்டியை அவுத்து தலைகீழா கட்றார்?”
    ”கட்சி மாறிட்டா அப்படித்தான். ரெண்டு சைடுலயும் வெவ்வேற       கட்சிக்கரை  இருக்கும்.”

3.’பாட்டில், டப்பா என எதையும் கைக்கு எட்ற தூரத்தில் வெக்க முடியல. நம்ம பொடியன் கவுத்டறான்’
    ’எதிர்காலத்தில எம்.பி. ஆயிடுவான். கவலைப்படாதே...’

4.”ஏற்கனவே ஊழலில் சம்பாதித்த பணம் நிறைய இருக்கிறது. எனவே,
     புதிதாக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி எங்களுக்கு இல்லை.”
   
5.’20 சீட்ல ஜெயிச்சா போதும்னு தலைவர் சொல்றாரே...ஆட்சியமைக்க அது போதுமா?’
    ’ஆட்சியை கவிழ்க்க அது போதுமே.’

6.”முதல் கட்டமா முடிஞ்ச அளவு கள்ள ஓட்டு போடுங்க. அப்படி போட முடியலைன்னா
    அன்னிக்கு நைட் ஓட்டுப்பெட்டியை வாக்குச்சாவடியில இருந்து மாற்றிடலாம்....”
    ”ஓகோ...இரண்டு கட்டமா தேர்தல் நடக்குதுன்னாங்களே....இப்படித்தானா !!!?”

இவை அனைத்தும் எஸ்.எம்.எஸ். ஜோக்குகளே. div style='clear: both;'/>

பெண்கள் நாட்டின் கண்கள்

ஒரு பெண்னின் பரிதாபக்கக்கதை: 

http://www.thirdeyehealth.com/images/clear-eye.jpg

எத்தனையோக் கனவுகளுடன் சுற்றித் திரிய வேண்டிய ஒரு பெண், குழந்தையாக இருந்த போது தன் அம்மா செய்த முட்டாள்த்தனத்தால் இன்று இல்லாமல் போய்விட்டாள். இது போன்ற முட்டாள்த்தனங்களை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கதை ஒரு பாடமாக இருக்கட்டும்.என அகிலா - (மல்லிகை ப்ளாக்) அவர்கள் கூறியது போல் ஊட்டி-குன்னூரில் சமீபத்தில் (4-5 மாதத்திற்கு முன்பு) நடந்தது. ஆனால் குழ்ந்தைக்கு வயது 4 அல்ல 7.

ஏன் இந்த பெண்கள் இப்படி செய்கிறார்கள்? அல்லது செய்யத் தூண்டப்படுகிறார்களா?
http://www.thecrazy5.com/pictures/archive/GirlsBrideGroom.jpg
பெண்கள் பிறந்ததிலிருந்து ஒரு ஆடவரை (அப்பா, அண்ணா, கணவன், etc.,) சார்ந்து இருப்பதாலா?

இதை தடுப்பதற்கு வழி ஏதும் உண்டோ? div style='clear: both;'/>

Sunday, January 9, 2011

கொடநாடு பரோட்டா செய்வது எப்படி?

கொடநாடு பரோட்டா செய்வது எப்படி?
http://www.roudhrampazhagu.com/UserFiles/Image/paratha.jpg
Add caption


எக்லஸ் பரோட்டா:
அனைத்து பரோட்டா வகைகளுக்கும் எக் போட்டால் மிருதுவாக இருக்கும் என்பதால் அனைத்து ஹோட்டல்களீலும் பரோட்டாக்களுக்கு எக் சேர்க்கிறார்கள். சைவப்பிரியர்களுக்கு மற்றும் அசைவத்தை கைவிட்டவர்களுக்கு இதோ கொடநாடு பரோட்டா மெனு.

தேவையான பொருள்கள்:
1/2கி மைதா,1-சிட்டிகை சோடா உப்பு,1-spoon சர்க்கரை, சுவைக்கேற்ப உப்பு,  3spoon எண்ணெய், தண்ணீர்.

மாவு தயாரிக்கும் முறை:
    மைதாவுடன் சோடா உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, சர்க்கரை, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இக்கலவையை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

செய்முறை:

             மாவை உருண்டைகளாக்கி பலகையின் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி உருண்டையை  மெல்லியதாக தேய்க்கவும். பின் இதன் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி பரவலாக தேய்த்து ஒரு ஓரத்தில் பிடித்து தூக்கி (மடிப்பு, மடிப்பாக இருக்கும்) அதை அப்படியே பலகையின் மேல் வைத்து சுற்றவும்.
பின் லேசாக பூரி கட்டையால் தேய்க்கவும். இதை தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். இது போல் ஒவ்வொரு உருண்டையையும் இதே போல் செய்யவும்.
    
 http://samayal.chettinadrecipes.com/wp-content/uploads/2010/12/parrota.jpg

சைட் டிஷ் - வெஜிடபிள் குருமா / சென்னா மசாலா.....
    நர்ளை வேறொரு சமையலுடன் உங்களை சந்திக்க வருவது அபி.... div style='clear: both;'/>

Tuesday, December 28, 2010

இது நம்ம ஆளு

http://www.thinakaran.lk/2010/02/08/r1002081-1.jpg


பஞ்சகவியத்த பத்தி யாருக்காவது தெரியலினா  பாக்யராஜ்-ன் இது நம்ம ஆளு படத்தை பாருங்க.

பஞ்சகவியத்தின் மகிமை:

ரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க, ரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்க, ஆரம்பநிலையில் உள்ள

புற்று கட்டிகளை கரைக்க பஞ்சகவியம் பயன்படுகிறது.

15ml பஞ்சகவியம் + 1 tumbler தண்ணிர் + 10ml  தேன் சேர்த்துக் குடிக்கவும். div style='clear: both;'/>

Monday, December 27, 2010

மனைவி ஒரு மந்திரி

1. மனைவி ஒரு கம்பளிப் போர்வை போன்றவள். அதை நீ போர்த்திக்
கொண்டால் சில வேளைகளில் தொந்தரவாக இருக்கும். அதைத்
தூக்கி எறிந்துவிட்டாலோ குளிர் தாங்கவே முடியாது.

2. மனைவி தரும் சுகம் அமிர்தம். கள்ளக்காதலால் பெறும் சுகம்
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பைப் போன்றதாகும்.

3. காதலி முடிவடையாத புத்தகம்; மனைவி முழு புத்தகம்;
கள்ளக்காதலி கறையான்.

4. காதல் என்ற படகினைத் திருமணம் என்ற கடலினில் கணவன்
என்னும் படகோட்டி எவ்வளவு சாமர்த்தியமாக ஓட்டினாலும்
 மனைவி என்ற சூறாவளி அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

5. உங்களுக்கு வரும் மனைவி எப்படிக் கற்புள்ளவளாகவும்,
கபடமற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ
அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள்
என்பதை மறவாதீர்கள்.

6. மனைவி கணவனுக்கு அவனுடைய சின்னஞ்சிறு வயதில் எஜமானி,
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தாதி.

7. இந்த உலகில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு. அவளும்
தன் மனைவிதான் என்று ஒவ்வொறு கணவனும் நினைக்கிறான்.

8. மனைவியின் மனதை புரிந்துக்கொள்வதற்குள் பாதி ஆயுள்
முடிந்துவிடும்.

9. கணவன் மறப்பதைக் குறித்து மனைவி வருந்துகிறாள். மனைவி
மறக்காமல் இருப்பதைக் குறித்து கணவன் வருந்துகிறான்.

10. குதிரையை ஒரு மாதம் கழித்துப் புகழ வேண்டும். மனைவியை
ஒரு வருடம் கழித்துப் புகழ வேண்டும்.

11. திருமண வாழ்க்கையில் ஒரு வினோதம் என்னவென்றால்
கெட்டவர்களுக்கு மிக நல்ல மனைவிகள் வாய்த்து விடுகிறார்கள்.
மனைவியின் பொறுமையைச் சோதிப்பதற்கு இதைவிட வேறு
வில்லங்கமான வாழ்க்கை என்ன இருக்கிறது?

12. புருஷன் பேச்சில் மனைவிக்குக் கவனம் எப்போதும் இருக்கும்
தெரியுமா? அந்தப் பேச்சு இன்னொரு பெண்ணை பற்றி
இருக்கும்போதுதான்.

13. கணவன் மனைவிக்குத் துரோகம் செய்தால், அது வீட்டுக்குள்ளிருந்து
வீதியில் காறி உமிழ்வது போன்றது. மனைவி, கணவனுக்குத் துரோகம்
செய்தால் அது வீதியிலிருந்து வீட்டுக்குள் காறி உமிழ்வது போன்றது.

14. இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள். div style='clear: both;'/>